பைங் கண்வாள் அரவு அணையவனொடு பனி மலரோனும்
காணாது
“அங்கணா! அருள்!” என அவர் அவர் முறைமுறை
இறைஞ்ச நின்றார்
சங்க நால்மறையவர் நிறைதர, அரிவையர் ஆடல் பேண,
திங்கள் நாள் விழ மல்கு திரு நெல்வேலி உறை செல்வர்
தாமே.