பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
வஞ்சனையார் ஆர் பாடும் சாராத மைந்தனை, துஞ்சு இருளில் ஆடல் உகந்தானை, தன் தொண்டர் நெஞ்சின் இருள் கூரும்பொழுது நிலாப் பாரித்து அம் சுடர் ஆய் நின்றானை,-நான் கண்டது ஆரூரே.