திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருநேரிசை

அஞ்சையும் அடக்கி, ஆற்றல் உடையனாய், அநேக காலம்
வஞ்சம் இல் தவத்துள் நின்று, மன்னிய பகீரதற்கு
வெஞ்சின முகங்கள் ஆகி விசையொடு பாயும் கங்கை
செஞ்சடை ஏற்றார்-சேறைச் செந்நெறிச் செல்வனாரே.

பொருள்

குரலிசை
காணொளி