திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: பழந்தக்கராகம்

பெண்டிர், மக்கள், சுற்றம், என்னும் பேதைப் பெருங்கடலை
விண்டு, பண்டே வாழ மாட்டேன்; வேதனை நோய் நலிய,
கண்டு கண்டே உன்தன் நாமம் காதலிக்கின்றது, உள்ளம்;-
வண்டு கெண்டிப் பாடும் சோலை வலிவலம் மேயவனே!

பொருள்

குரலிசை
காணொளி