திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

கொன்றைமாலையும் கூவிளம் மத்தமும்
சென்று சேரத் திகழ்சடை வைத்தவன்,
என்றும் எந்தைபிரான், இடைமருதினை
நன்று கைதொழுவார் வினை நாசமே.

பொருள்

குரலிசை
காணொளி