பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருஇடைமருதூர்
வ.எண் பாடல்
1

பாசம் ஒன்று இலராய், பலபத்தர்கள்
வாசம் நாள்மலர் கொண்டு அடி வைகலும்,
ஈசன் எம்பெருமான் இடைமருதினில்
பூசம், நாம் புகுதும், புனல் ஆடவே.

2

மறையின் நாள்மலர் கொண்டு அடி வானவர்-
முறையினால் முனிகள் வழிபாடு செய்
இறைவன், எம்பெருமான், இடைமருதினில்
உறையும் ஈசனை, உள்கும், என் உள்ளமே.

3

கொன்றைமாலையும் கூவிளம் மத்தமும்
சென்று சேரத் திகழ்சடை வைத்தவன்,
என்றும் எந்தைபிரான், இடைமருதினை
நன்று கைதொழுவார் வினை நாசமே.

4

இம்மை வானவர் செல்வம் விளைத்திடும்,
அம்மையே பிறவித்துயர் நீத்திடும்,
எம்மை ஆளும், இடைமருதன் கழல்
செம்மையே தொழுவார் வினை சிந்துமே.

5

வண்டு அணைந்தன வன்னியும் கொன்றையும்
கொண்டு அணிந்த சடைமுடிக் கூத்தனார்,
எண் திசைக்கும் இடைமருதா! என,
விண்டுபோய் அறும், மேலைவினைகளே.

6

ஏறு அது ஏறும் இடைமருது ஈசனார்,
கூறுவார் வினை தீர்க்கும் குழகனார்,
ஆறு செஞ்சடை வைத்த அழகனார்க்கு
ஊறி ஊறி உருகும், என் உள்ளமே.

7

விண் உளாரும் விரும்பப்படுபவர்;
மண் உளாரும் மதிக்கப்படுபவர்;
எண்ணினார், பொழில் சூழ் இடை மருதினை
நண்ணினாரை நண்ணா, வினை; நாசமே.

8

வெந்த வெண் பொடிப் பூசும் விகிர்தனார்,
கந்தமாலைகள் சூடும் கருத்தனார்,
எந்தை, என் இடை மருதினில் ஈசனைச்
சிந்தையால் நினைவார் வினை தேயுமே.

9

வேதம் ஓதும் விரிசடை அண்ணலார்,
பூதம் பாட நின்று ஆடும் புனிதனார்
ஏதம் தீர்க்கும் இடைமருதா! என்று-
பாதம் ஏத்தப் பறையும், நம் பாவமே.

10

கனியினும், கட்டி பட்ட கரும்பினும்,
பனிமலர்க்குழல் பாவை நல்லாரினும்,
தனி முடீ கவித்து ஆளும் அரசினும்,
இனியன் தன் அடைந்தார்க்கு, இடைமருதனே.

11

முற்றிலா மதி சூடும் முதல்வனார்;
ஒற்றினார், மலையால் அரக்கன் முடி;
எற்றின் ஆர் கொடியார்; இடைமருதினைப்
பற்றினாரைப் பற்றா, வினைப் பாவமே.

திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
திருஇடைமருதூர்
வ.எண் பாடல்
1

பறையின் ஓசையும் பாடலின் ஓசையும்
மறையின் ஓசையும் வைகும், அயல் எலாம்,
இறைவன், எங்கள் பிரான் இடைமருதினில்
உறையும் ஈசனை உள்கும், என் உள்ளமே.

2

மனத்துள் மாயனை, மாசு அறு சோதியை,
புனிற்றுப் பிள்ளை வெள்ளை(ம்) மதி சூடியை,
எனக்குத் தாயை, எம்மான் இடைமருதனை,
நினைத்திட்டு ஊறி நிறைந்தது-என் உள்ளமே.

3

வண்டு அணைந்தன வன்னியும் மத்தமும்
கொண்டு அணிந்த சடைமுடிக் கூத்தனை
எண்திசைக்கும் இடைமருதா! என,
விண்டுபோய் அறும், மேலைவினைகளே.

4

துணை இலாமையில்-தூங்கு இருள் பேய்களோடு
அணையல் ஆவது எமக்கு அரிதே! எனா,
இணை இலா இடைமா மருதில்(ல்) எழு
பணையில் ஆகமம் சொல்லும், தன் பாங்கிக்கே.

5

மண்ணை உண்ட மால் காணான், மலர் அடி;
விண்ணை விண்டு அயன் காணான், வியன்முடி;
மொண்ணை மா மருதா! என்று என் மொய்குழல்
பண்ணை ஆயமும் தானும் பயிலுமே.

6

மங்கை காணக் கொடார், மணமாலையை;
கங்கை காணக் கொடார், முடிக் கண்ணியை;
நங்கைமீர்! இடைமருதர் இந் நங்கைக்கே
எங்கு வாங்கிக் கொடுத்தார், இதழியே?

7

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

8

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

9

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.

10

* * * * * பாடல் இதுவரை கிடைக்கவில்லை.