திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

பெருங் கை ஆகிப் பிளிறி வருவது ஓர்
கருங்கையானைக்-களிற்று உரி போர்த்தவர்;
வரும் கை யானை மதக்களிறு அஞ்சினைப்
பொரும் கை யானை கண்டீர்-புகலூரரே.

பொருள்

குரலிசை
காணொளி