திருமுறை 5 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

100 பதிகங்கள் - 1046 பாடல்கள் - 77 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருக்குறுந்தொகை

மலியும் செஞ்சடை வாள் அரவ(ம்)மொடு
பொலியும் பூம்புனல் வைத்த புனிதனார்,
நலியும் கூற்றை நலிந்த நள்ளாறர் தம்
வலியும் கண்டு இறுமாந்து மகிழ்வனே.

பொருள்

குரலிசை
காணொளி