திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: கொல்லி

இலை கொள் சோலைத்தலை இருக்கும் வெண் நாரைகாள்!
அலை கொள் சூலப்படை அடிகள் ஆரூரர்க்கு,
கலைகள் சோர்கின்றதும், கன வளை கழன்றதும்,
முலைகள் பீர் கொண்டதும், மொழிய வல்லீர்களே? .

பொருள்

குரலிசை
காணொளி