திருமுறை 10 - திருமந்திரம் - திருமூலர்

225 பதிகங்கள் - 2988 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

நினைக்கின் நினைக்கும் நினைப்பவர் தம்மைச்
சுனைக்குள் விளை மலர் சோதியினானைத்
தினைப் பிளந்து அன்ன சிறுமையர் ஏனும்
கனத்த மனத்து அடைந்தால் உயர்ந்தாரே.

பொருள்

குரலிசை
காணொளி