திருமுறை 3 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

126 பதிகங்கள் - 1384 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: சாதாரி

சொல் பிரிவு இலாத மறை பாடி நடம் ஆடுவர், தொல் ஆனை
உரிவை
மல் புரி புயத்து இனிது மேவுவர், எந்நாளும் வளர் வானவர்
தொழத்
துய்ப்பு அரிய நஞ்சம் அமுது ஆக முன் அயின்றவர், இயன்ற
தொகு சீர்
வெற்பு அரையன் மங்கை ஒரு பங்கர், நகர் என்பர் திரு
வேதிகுடியே.

பொருள்

குரலிசை
காணொளி