போழும் மதி, பூண் அரவு, கொன்றைமலர், துன்று சடை
வென்றி புக மேல்
வாழும் நதி தாழும் அருளாளர்; இருள் ஆர் மிடறர்; மாதர்
இமையோர்
சூழும் இரவாளர்; திருமார்பில் விரி நூலர்; வரிதோலர்;
உடைமேல்
வேழ உரி போர்வையினர்; மேவு பதி என்பர் திரு
வேதிகுடியே.