திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருநேரிசை

மடுக்களில் வாளை பாய வண்டு இனம் இரிந்த பொய்கை,
பிடிக் களிறு என்னத் தம்மில் பிணை பயின்று அணை வரால்கள்
தொடுத்த நல் மாலை ஏந்தித் தொண்டர்கள் பரவி ஏத்த,
வடித் தடங்கண்ணி பாகர்-வலம்புரத்து இருந்த ஆறே!

பொருள்

குரலிசை
காணொளி