திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)

113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்

பதிகம்: 
பண்: திருநேரிசை

மஞ்சனே! மணியும் ஆனாய்; மரகதத்திரளும் ஆனாய்;
நெஞ்சுளே புகுந்து நின்று நினைதரும் நிகழ்வினானே!
துஞ்சும் போதாக வந்து துணை எனக்கு ஆகி நின்று(வ்)
“அஞ்சல்!” என்று அருள வேண்டும் ஆவடுதுறை உளானே!

பொருள்

குரலிசை
காணொளி