பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
செறிவு இலேன்; சிந்தையுள்ளே சிவன் அடி தெரிய மாட்டேன்; குறி இலேன்; குணம் ஒன்று இல்லேன்; கூறுமா கூற மாட்டேன்; நெறி படு மதி ஒன்று இல்லேன்; நினையுமா நினைய மாட்டேன்; அறிவு இலேன்; அயர்த்துப் போனேன்-ஆவடுதுறை உளானே!