பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 4 - தேவாரம் - திருநாவுக்கரசர் (அப்பர்)
113 பதிகங்கள் - 1121 பாடல்கள் - 52 கோயில்கள்
கோலம் மா மங்கை தன்னைக் கொண்டு ஒரு கோலம் ஆய சீலமே அறிய மாட்டேன்; செய்வினை மூடி நின்று ஞாலம் ஆம் இதனுள் என்னை நைவியா வண்ணம் நல்காய் ஆலம் மா நஞ்சம் உண்ட ஆவடுதுறை உளானே!