திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)

100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்

பதிகம்: 
பண்: இந்தளம்

உதிரம் நீர் இறைச்சிக் குப்பை எடுத்தது மலக்குகை(ம்)மேல்
வருவது ஓர் மாயக் கூரை வாழ்வது ஓர் வாழ்வு வேண்டேன்;
கரிய மால், அயனும், தேடிக் கழல் முடி காண மாட்டா
அரியனாய் நின்ற ஆரூர் அப்பனே! அஞ்சினேனே .

பொருள்

குரலிசை
காணொளி