பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 7 - தேவாரம் - சுந்தரமூர்த்தி நாயனார் (சுந்தரர்)
100 பதிகங்கள் - 1029 பாடல்கள் - 85 கோயில்கள்
பொய்த் தன்மைத்து ஆய மாயப்போர்வையை, மெய் என்று எண்ணும் வித்தகத்து ஆய வாழ்வு வேண்டி, நான் விரும்பகில்லேன்; முத்தினைத் தொழுது, நாளும் முடிகளால் வணங்குவார்க்கு(வ்) அத் தன்மைத்து ஆகும் ஆரூர் அப்பனே! அஞ்சினேனே .