பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
கண்ணப்பன் ஒப்பது ஓர் அன்பு இன்மை கண்டபின், என் அப்பன், என் ஒப்பு இல் என்னையும் ஆட்கொண்டருளி, வண்ணப் பணித்து, என்னை வா என்ற வான் கருணைச் சுண்ணப் பொன் நீற்றற்கே சென்று ஊதாய்; கோத்தும்பீ!