"சே உயரும் திண் கொடியான் திருவடியே சரண்" என்று சிறந்த
அன்பால்
நா இயலும் மங்கையொடு நான்முகன் தான் வழிபட்ட நலம் கொள
கோயில்
வாவிதொறும் வண்கமலம் முகம் காட்ட, செங்குமுதம் வாய்கள்
காட்ட,
காவி இருங்கருங்குவளை கரு நெய்தல் கண் காட்டும் கழுமலமே.