திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: மேகராகக்குறிஞ்சி

பெருந்தடங்கண் செந்துவர்வாய்ப் பீடு உடைய மலைச் செல்வி
பிரியா மேனி
அருந்தகைய சுண்ணவெண் நீறு அலங்கரித்தான், அமரர் தொழ,
அமரும்கோயில்
தரும் தடக்கை முத்தழலோர் மனைகள் தொறும் இறைவனது
தன்மை பாடி,
கருந்தடங்கண்ணார் கழல் பந்து அம்மானைப் பாட்டு அயரும்
கழுமலமே.

பொருள்

குரலிசை
காணொளி