பெருந்தடங்கண் செந்துவர்வாய்ப் பீடு உடைய மலைச் செல்வி
பிரியா மேனி
அருந்தகைய சுண்ணவெண் நீறு அலங்கரித்தான், அமரர் தொழ,
அமரும்கோயில்
தரும் தடக்கை முத்தழலோர் மனைகள் தொறும் இறைவனது
தன்மை பாடி,
கருந்தடங்கண்ணார் கழல் பந்து அம்மானைப் பாட்டு அயரும்
கழுமலமே.