அடல் வந்த வானவரை அழித்து, உலகு தெழித்து உழலும்
அரக்கர்கோமான்
மிடல் வந்த இருபது தோள் நெரிய, விரல் பணிகொண்டோன்
மேவும் கோயில்
நட வந்த உழவர், "இது நடவு ஒணா வகை பரலாய்த்து" என்று
துன்று
கடல் வந்த சங்கு ஈன்ற முத்து வயல் கரை குவிக்கும் கழுமலமே.