கற்றவர்கள் பணிந்து ஏத்தும் கழுமலத்துள் ஈசன்தன் கழல்மேல்,
நல்லோர்
நல்-துணை ஆம் பெருந்தன்மை ஞானசம்பந்தன்தான் நயந்து
சொன்ன
சொல்-துணை ஓர் ஐந்தினொடு ஐந்து இவை வல்லார், மலராள்
துணைவர் ஆகி,
முற்று உலகம் அது கண்டு, முக்கணான் அடி சேர முயல்கின்றாரே.