திருமுறை 1 - தேவாரம் - திருஞானசம்பந்தர்

136 பதிகங்கள் - 1472 பாடல்கள் - 89 கோயில்கள்

பதிகம்: 
பண்: மேகராகக்குறிஞ்சி

"தரும் சரதம் தந்தருள்!" என்று அடி நினைந்து, தழல் அணைந்து,
தவங்கள் செய்த
பெருஞ் சதுரர் பெயலர்க்கும் பீடு ஆர் தோழமை அளித்த
பெருமான் கோயில்
அரிந்த வயல் அரவிந்தம் மது உகுப்ப, அது குடித்துக் களித்து
வாளை,
கருஞ் சகடம் இளக வளர் கரும்பு இரிய, அகம் பாயும் கழுமலமே.

பொருள்

குரலிசை
காணொளி