குணம் இன்றிப் புத்தர்களும், பொய்த்தவத்தை மெய்த்தவம் ஆய்
நின்று கையில்
உணல் மருவும் சமணர்களும், உணராத வகை நின்றான் உறையும்
கோயில்
மணம் மருவும் வதுவை ஒலி, விழவின் ஒலி, இவை இசைய
மண்மேல்-தேவர்
கணம் மருவும் மறையின் ஒலி கீழ்ப்படுக்க, மேல்படுக்கும்
கழுமலமே.