புவி முதல் ஐம்பூதம் ஆய், புலன் ஐந்து ஆய், நிலன் ஐந்து ஆய்,
கரணம் நான்குஆய்,
அவை அவை சேர் பயன் உரு ஆய், அல்ல உரு ஆய், நின்றான்;
அமரும்கோயில்
தவம் முயல்வோர் மலர் பறிப்பத் தாழ விடு கொம்பு உதைப்ப,
கொக்கின் காய்கள்
கவண் எறி கல் போல் சுனையின் கரை சேர, புள் இரியும்
கழுமலமே.