நடமாடி எழுலகம் உய்யக் கொண்ட
நாயகரே! நான்மறையோர் தங்களோடும்
திடமாட மதில்தில்லைக் கோயில் கொண்ட
செல்வரே! உமதருமை தேரா விட்டீர்;
இடமாடி இருந்தவளும் விலக்கா விட்டால்
என்போல்வார்க்(கு) உடன்நிற்க இயல்வ தன்று;
தடமாலை முடிசாய்த்துப் பணிந்த வானோர்
தஞ்சுண்டா யங்கருதி நஞ்சுண்டீரே.