றிவில் ஒழுக்கமும், பிறிதுபடு பொய்யும்
கடும்பிணித் தொகையும், இடும்பை ஈட்டமும்
இனையன பலசரக் கேற்றி, வினையெனும்
தொல்மீ காமன் உய்ப்ப,அந்நிலைக்
5
கருவெனும் நெடுநகர் ஒருதுறை நீத்தத்துப்
புலனெனும் கோள்மீன் அலமந்து தொடர,
பிறப்பெனும் பெருங்கடல் உறப்புகுந்(து)அலைக்கும்
துயர்த்திரை உவட்டின் பெயர்ப்பிடம்அயர்த்துக்
குடும்பம் என்னும் நெடுங்கல்வீழ்த்து
10
நிறையெனும்கூம்பு முரிந்து, குறையா
உணர்வெனும் நெடும்பாய் கீறிப் புணரும்
மாயப் பெயர்ப்படு காயச் சிறைக்கலம்
கலங்குபு கவிழா முன்னம்,அலங்கல்
மதியுடன் அணிந்த பொதியவிழ்சடிலத்துப்
15
பையரவணிந்த தெய்வ நாயக!
தொல்லெயில் உடுத்த தில்லை காவல!
வம்பலர் தும்பை அம்பல வாண!நின்
அருளெனும் நலத்தார் பூட்டித்
திருவடி நெடுங்கரை சேர்த்துமா செய்யே.