உலவு சலதி வாழ்விடம் அமரர் தொழவுணாவென
நுகரும் ஒருவர் ஊழியின் இறுதியொருவர் ஆழிய
புலவு கமழ்க ரோடிகை உடைய புனிதர்பூசுரர்
புலிசை யலர்செய் போதணிபொழிலின் நிழலின் வாழ்வதோர்
கலவ மயில னார்சுருள் கரிய குழலினார்குயில்
கருது மொழியி னார்கடை நெடியவிழியி னாரிதழ்
இலவின் அழகி யாரிடை கொடியின்வடிவி னார்வடி
வெழுதும் அருமை யாரென திதயமுழுதும் ஆள்வரே.