வணங்குமிடை யீர்வறிது வல்லியிடை யாள்மேல்
மாரசர மாரிபொழி யப்பெறு மனத்தோ
டுணங்கியிவள் தானுமெலி யப்பெறும் இடர்க்கே
ஊதையெரி தூவியுல வப்பெறும் ஆடநடமாடும்அடுத்தே
பிணங்கியர வோடுசடை ஆடநட மாடும்
பித்தரென வும்மிதயம் இத்தனையும் ஒரீர்
அணங்குவெறி யாடுமறி யாடுமது வீரும்
மையலையும் அல்லலையும் அல்ல தறியீரே.