திருமுறை 11 - பதினோராம் திருமுறை - 12 ஆசிரியர்கள்

41 பதிகங்கள் - 1781 பாடல்கள் - 2 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அம்பலவர் அங்கணர் அடைந்தவர் தமக்கே

அன்புடையர் என்னுமிதென் ஆனையை யுரித்தே
கம்பலம் உவந்தருளு வீர்மதனன் வேவக்

கண்டருளு வீர்பெரிய காதலறி யாதே

வம்பலர் நிறைந்துவசை பேசவொருமாடே

வாடையுயீர் ஈரமணி மாமையும் இழந்தென்

கொம்(பு)அல மருந்தகைமை கண்டுதகவின்றிக்

கொன்றையரு ளீர்கொடியிர் என்றருளவீரே.

பொருள்

குரலிசை
காணொளி