அம்பலவர் அங்கணர் அடைந்தவர் தமக்கே
அன்புடையர் என்னுமிதென் ஆனையை யுரித்தே
கம்பலம் உவந்தருளு வீர்மதனன் வேவக்
கண்டருளு வீர்பெரிய காதலறி யாதே
வம்பலர் நிறைந்துவசை பேசவொருமாடே
வாடையுயீர் ஈரமணி மாமையும் இழந்தென்
கொம்(பு)அல மருந்தகைமை கண்டுதகவின்றிக்
கொன்றையரு ளீர்கொடியிர் என்றருளவீரே.