பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 8.1 - திருவாசகம் - மாணிக்கவாசகர்
60 பதிகங்கள் - 705 பாடல்கள் - 1 கோயில்கள்
முதலைச் செவ் வாய்ச்சியர் வேட்கை வெந்நீரில் கடிப்ப மூழ்கி, விதலைச் செய்வேனை விடுதி கண்டாய்? விடக்கு ஊன் மிடைந்த சிதலைச் செய் காயம் பொறேன்; சிவனே, முறையோ? முறையோ? திதலைச் செய் பூண் முலை மங்கை பங்கா, என் சிவகதியே!