பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
நனவு ஆதி தூலமே சூக்கப் பகுதி அனது ஆன ஐ ஐந்தும் விந்துவின் சத்தி தனது ஆம் விந்து தான் நின்று போந்து கனவா நனவில் கலந்தது இவ் ஆறே.
நனவில் அதீதம் பிறந்தார் கிடந்தார் நனவில் துரியம் நிகழ்ந்தார் தவழ்ந்தார் நனவில் சுழுத்தி நடந்தார் வளர்ந்தார் நனவில் கனவோடு நல் செய்தி ஆனதே.
செறியும் கிரியை சிவ தத்துவம் ஆம் பிறிவில் சுக யோகம் பேர் அருள் கல்வி குறிதல் திருமேனி குணம் பல ஆகும் அறிவில் சரா சரம் அண்டத்து அளவே.
ஆதி பரம் சிவம் சத்தி சதாசிவம் ஏதம் இல் ஈசன் நல் வித்தியா தத்துவம் போதம் கலை கால நியதி மா மாயை நீதி ஈறு ஆக நிறுத்தினன் என்னே.
தேசு திகழ் சிவம் சத்தி சதா சிவம் ஈசன் நல் வித்தை இராகம் கலைகாலம் ஆசு அகல் வித்தை நியதி மகா மாயை ஆசு இல் புருட ஆதி ஆன்மா ஈறு ஆறே.
ஆணவ மாயையும் கன்மமும் மா மலம் காணு முளைக்கும் தவிடு உமிஆன்மாவும் தாணுவை ஒவ்வாமல் தண் துலம் ஆய் நிற்கும் பேணுவாய் மற்று நின் பாசம் பிரித்தே.
பசுக்கள் பல வண்ணம் பால் ஒரு வண்ணம் பசுக்களை மேய்க்கின்ற ஆயன் ஒரு வண்ணம் பசுக்களை மேய்க்கின்ற ஆயன் கோல் போடில் பசுக்கள் தலைவனைப் பற்றி விடாவே.
உடல் இந்திய மனம் ஒண்புத்தி சித்தம் அடல் ஒன்று அகந்தை அறியாமை மன்னிக் கெடும் அவ் உயிர் மயல் மேலும் கிளைத்தால் அடைவது தான் ஏழ் நரகத்து உளாயே.
தன் தெரியாத அதீதம் தன் காண அம் சொல் தெரிகின்ற துரியம் சொல் காமியம் பெற்ற சுழுத்திப் பின் பேசு உறும் காதலால் மற்று அது உண்டிக் கன நனவு ஆதலே.
நனவில் கனவு இல்லை ஐந்து நனவில் கனவு இலாச் சூக்குமம் காணும் சுழுத்தி தனல் உண் பகுதியே தன் கூட்டு மாயை நனவில் துரியது அதீதம் தலை வந்தே.
ஆறு ஆறில் ஐ ஐந்து அகல நனா நனா ஆறாம் அவை விட ஆகும் நனாக் கனா வேறு ஆன ஐந்தும் விடவே நனா வினில் ஈறு ஆம் சுழுத்தி இதில் மாயை தானே.
மாயையில் வந்த புருடன் துரியத்தில் ஆய முறை விட்டதுவும் தான் அன்றாகிச் சேய கேவல விந்துடன் செல்லச் சென்றக் கால் ஆய தனுவின் பயன் இல்லை ஆமே.
அதீதத்து துரியத்து அறிவன் ஆம் ஆன்மா அதீதத் துரிய அதனால் புரிந்தால் அதீதத்து எழுந்து அறிவு ஆகிய மானன் முதிய அனலில் துரியத்து முற்றுமே
ஐ ஐந்து பத்துடன் ஆனது சாக்கிரம் கை கண்ட ஐ ஐந்தில் கண்டம் கனா என்பர் பொய் கண்ட மூவர் புருடர் சுழுனையின் மெய் கண்டவன் உந்தி மேவல் இருவரே.
புரி அட்டகமே பொருந்தல் நனவு புரி அட்டகம் தன்னின் மூன்று கனவு புரி அட்டகத்தில் இரண்டு சுழுத்தி புரி அட்டகத்து ஒன்று புக்கல் துரியமே.
நனவின் நனவு புலன் இல் வழக்கம் நனவில் கனவு நினைத்தல் மறத்தல் நனவில் சுழுத்தி உண் ஆடல் இலாமை நனவில் துரியம் அதீதத்து நந்தியே.
கனவின் நனவு போல் காண்டல் நனவு ஆம் கனவினில் கண்டு மறத்தல் கனவு ஆம் கனவில் சுழுத்தியும் காணாமை காணல் அணு ஆதி செய்தலில் ஆன துரியமே.
சுழுத்தி நனவு ஒன்றும் தோன்றாமை தோன்றல் சுழுத்தி கனவு அதன் உண்மை சுழுத்தியில் சுழுத்தி அறிவு அறிவாலே அழிகை சுழுத்தி துரியம் ஆம் சொல் அறும் பாழே.
துரிய நனவு ஆம் இதம் உணர் போதம் துரியக் கனவு ஆம் அகம் உணர் போதம் துரியச் சுழுத்தி வியோமம் துரியம் துரியம் பரம் எனத் தோன்றிடும் தானே.
அறிவு அறிகின்ற அறிவு நனவு ஆம் அறிவு அறியாமை அடையக் கனவு ஆம் அறிவு அறி அவ் அறியாமை சுழுத்தி அறிவு அறிவு ஆகும் ஆனதுரியமே.
தான் எங்கும் ஆய அவனை அம் மலம் தான் விட்டு ஞானம் தனது உரு ஆகி நயந்தபின் தான் எங்கும் ஆய் நெறி நின்றது தான் விட்டு மேன் அந்தச் சூக்கம் அவை வன்னம் மேல் இட்டே.
ஐ ஐந்தும் ஆறும் ஓர் ஐந்தும் நனாவினில் எய்யும் நனவு கனவு சுழுத்தியா மெய்யும் பின் சூக்கமும் மெய்ப் பகுதி மாயை ஐயமும் தான் அவன் அத் துரியத்தனே.
ஈது என்று அறிந்திலன் இத்தனை காலமும் ஈது என்று அறிந்த பின் ஏதும் அறிந்திலேன் ஈது என்று அறியும் அறிவை அறிந்தபின் ஈது என்று அறியும் இயல்பு உடையோனே.
உயிர்க்கு உயிராகி உருவாய் அருவாய் அயல் புணர்வு ஆகி அறிவாய்ச் செறிவாய் நயப்பு உறு சத்தியும் நாதன் உலகு ஆதி இயற்பு இன்றி எல்லாம் இருள் மூடம் ஆமே.
சத்தி இராகத்தில் தான் நல் உயிர் ஆகி ஒத்து உறு பாச மலம் ஐந்தோடு ஆறு ஆறு தத்துவ பேதம் சமைத்துக் கருவியும் வைத்தனன் ஈசன் மலம் அறும் ஆறே.
சாக்கிரா தீதத்தில் ஆணவம் தன் உண்மை சாக்கிரா தீதம் துரியத்தில் தான் உறச் சாக்கிரா தீதத்தில் ஆணவம் தான் விடாச் சாக்கிரா தீதம் பரன் உண்மை தங்குமே
மலக் கலப்பாலே மறைந்தது சத்தி மலக் கலப்பாலே மறைந்தது ஞானம் மலக் கலப்பாலே மறைந்தனன் தாணு மலக் கலப்பு அற்றான் மதி ஒளி ஆமே.
திகைக் கின்ற சிந்தையுள் சிங்கங்கள் மூன்று நகைக் கின்ற நெஞ்சுள் நரிக் குட்டி நான்கு வகைக் கின்ற நெஞ்சின் உள் ஆனைக் கன்று ஐந்து பகைக் கின்ற நெஞ்சுக்குப் பால் இரண்டு ஆமே.
கதறு பதி னெட்டுக் கண்களும் போகச் சிதறி எழுந்திடும் சிந்தையை நீரும் விதறு படா முன்னம் மெய் வழி நின்றால் அதிர வருவது ஓர் ஆனையும் ஆமே
நனவு அகத்தே ஒரு நால் ஐந்தும் வீடக் கனவு அகத்தே உள் கரணங்களோடு முனவு அகத்தே நின்று உதறி உள் புக்கு நினைவு அகத்து இன்றி சுழுத்தி நின்றானே.
நின்றவன் ஆசான் நிகழ் துரியத்தனாய் ஒன்றி உலகின் நியம் ஆதிகள் உற்றுச் சென்று துரிய ஆதீதத்தே சில காலம் நின்று பரன் ஆய் நின்மலன் ஆமே.
ஆன அவ் ஈசன் அதீதத்தில் வித்தையாத் தான் உலகு உண்டு சதாசிவ மா சத்தி மேனிகள் ஐந்தும் போய் விட்டுச் சிவம் ஆகி மோனம் அடைந்து ஒளி மூலத்தன் ஆமே.
மண்டலம் மூன்றின் உள் மாய நல் நாடனைக் கண்டு கொண்டு உள்ளே கருதிக் கழிகின்ற விண்டு அலர் தாமரை மேல் ஒன்றும் கீழ் ஆகத் தண்டமும் தான் ஆக அகத்தின் உள் ஆமே.
போது அறியாது புலம்பின புள் இனம் மாது அறியா வகை நின்று மயங்கின வேதறி ஆவணம் நின்றான் எம் இறை சூது அறிவார் உச்சி சூடி நின்றாரே.
கருத்து அறிந்து ஒன்பது கண்டமும் ஆங்கே பொருத்து அறிந்தோன் புவனாபதி நாடித் திருத்து அறிந்தேன் மிகு தேவர் பிரானை வருத்து அறிந்தேன் மனம் மன்னி நின்றானே.
ஆன விளக்கு ஒளி தூண்டும் அவன் என்னத் தான விளக்கு ஒளியாம் மூல சாதனத்து ஆன விதி மூலத் தானத்தில் அவ் விளக்கு ஏனை மதி மண்டலம் கொண்டு எரியுமே.
உள் நாடும் ஐவர்க்கும் அண்டை ஒதுங்கிய விண் நாட நின்ற வெளியை வினவுறில் அண்ணாந்து பார்த்து ஐவர் கூடிய சந்தியில் கண்ணாடி காணும் கருத்து என்றானே.
அறியாத வற்றை அறிவான் அறிவான் அறிவான் அறியாதான் தன் அறிவு ஆகான் அறியா தவத்தை அறிவானைக் கூட்டி அறியாது அறிவானை யார் அறிவாரே.
துரிய தரிசனம் சொற்றோம் வியோமம் அரியன தூடணம் அந் நனவு ஆதி பெரியன கால பரம்பில் துரியம் அரிய அதீதம் அதீதத்தம் ஆமே.
மாயையில் சேதனன் மன்னும் பகுதியோன் மாயையின் மற்று அது நீவு தன் மாயை ஆம் கேவலம் ஆகும் சகலமா யோனியுள் தோயும் மனிதர் துரியத்துள் சீவனே.