பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
திருவாக்கும்; செய்கருமம் கைகூட்டும்;செஞ்சொல் பெருவாக்கும், பீடும்பெருக்கும்; - உருவாக்கும்; ஆதலால், வானோரும் ஆனை முகத்தானைக் காதலால் கூப்புவர்தம் கை.
கைக்கும் பிணியொடு, காலன் தலைப்படும்ஏல்லையினில் எய்க்கும் கவலைக்(கு) இடைந்தடைந்தேன்,வெம்மை நாவளைக்கும் பைக்கும் அரவரை யான்தந்த பாய்மதயானைபத்துத் திக்கும் பணிநுதற் கண்திரு வாளன் திருவடியே.
அடியமர்ந்து கொள்வாயே? நெஞ்சமே, அப்பம், இடி,அவலோ(டு) எள்உண்டை கன்னல் - வடிசுவையில் தாழவானை, ஆழ்வானைத் தன்னடியார் உள்ளத்தே வாழ்வானை வாழ்த்தியே வாழ்.
வாழைக் கனி,பல வின்கனி, மாங்கனி,தாஞ்சிறந்த கூழைச் சுருள்,குழை அப்பம்,எள் ளுருண்டையெல்லாந்துறுத்தும் பேழைப் பெருவயிற் றோடும் புகுந்தென்உளம்பிரியான் வேழத் திருமுகத் துக்செக்கர் மேனி விநாயன.
விநாயகனே வெவ்வினையை வேரறுக்க வல்லான்; விநாயகனே வேட்கைதணி விப்பான் - விநாயகனே விண்ணிற்கும், மண்ணிற்கும் நாதனுமாம்தன்மையினால். கண்ணிற் பணிமின் கனிந்து.
கனிய நினைவொடு நாடொறும் காதற்படுஅடியார்க்(கு) இனியன், இனி;யொ ரின்னாங் கிலம்எவரும்வணங்கும் பனிவெண் பிறை,நறுங் கொன்றைச் சடைப்,பலிதேரியற்கை முனிவன் சிறுவன், பெருவெங்கொல் யானைமுகத்தவனே.
யானை முகத்தான், பொருவிடையான்சேய்,அழகார் மான மணிவண்ணன் மாமருகன், - மேல்நிகழும் வெள்ளக் குமிழி மதத்து விநாயகன்என் உள்ளக் கருத்தின் உளன்.
உளதள வில்லதொர் காதல்என் நெஞ்சில்;வன்நஞ்சமுண்ட வளரிள மாமணி கண்டன்வண் டாடுவண்கோதை,பங்கத்(து) இளவளர் மாமதிக் கண்ணியெம் மான்மகன்,கைம்முகத்துக் களகள மாமதஞ் சேர்களி யானைக் கணபதியே.
கணங்கொண்ட வல்வினைகள்; கண்கொண்டநெற்றிப் பணங்கொண்ட பாந்தட் சடைமேல், - மணங்கொண்ட தாதகத்த தேன்முரலுங் கொன்றையான்தந்தளித்த போதகத்தின் தாள்பணியப் போம்.
போகபந் தத்(து)அதந்தம் இன்றிநிற்பீர்,புனை தார்முடிமேல் நாகபந் தத்(து)அந்த நாள்அம் பிறையிறையான்பயந்த மாகபந் (தத்(து)அந்த மாமழை போல்மதத்துக்கதப்போர் ஏகதந் தத்துஎந்தை செந்தாள் இணைபணிந்தேத்துமினே.
ஏத்தியே என்னுள்ளம் நிற்குமால்எப்பொழுதும் மாத்தனிவெண் கோட்டு மதமுகத்துத் -தூத்தழல்போல் செக்கர்த் திருமேனிச் செம்பொற்கழல்ஐங்கை முக்கட் கடாயானை முன்.
முன்னிளங் காலத்தி லேபற்றி னேன்;வெற்றிமீன்உயர்த்த மன்னிளங் காமன்தன் மைத்துன னே,மணிநீலகண்டத்(து) என்னிளங் காய்களி றே,இமை யோர்சிங்கமே,உமையாள் தன்னிளங் காதல னே,சர ணாவுன் சரணங்களே.
சரணுடை யேன்என்று தலைதொட் டிருக்க முரண்உடையேன் அல்லேன் நான்முன்னம் -திரள்நெடுங்கோட்(டு) அண்டத்தான், அப்புறத்தான், ஆனைமுகத்தான்அமரர் பண்டத்தான் தாள்பணியாப் பண்டு.
பண்டம்தம் ஆதரத் தான்என் றினியனவேபலவும் கொண்(டு)அந்த நாள்குறு காமைக் குறுகுவர்கூர்உணர்வில் கண்(டு)அந்த நீண்முடிக் கார்மத வார்சடைக்கற்றைஒற்றை வெண்தந்த வேழ முகத்(து)எம் பிரானடிவேட்கையரே.
வேட்கை வினைமுடித்து, மெய்யடியார்க்(கு)இன்பஞ்செய்து ஆட்கொண் டருளும் அரன்சேயை, -வாட்கதிர்கொள் காந்தார, மார்பிற் கமழ்தார்க் கணபதியை வேந்தா உடைத்தமரர் விண்.
விண்ணுதல் நுங்கிய விண்ணும் மண்ணும்செய்வினைப்பயனும் பண்ணுதல் நுங்கடன் என்பர்மெய் அன்பர்கள்பாய்மதமாக் கண்ணுதல், நுங்கிய நஞ்சமுண் டார்கருமாமிடற்றுப் பெண்ணுதல் நும்பிரி யாஒரு பாகன் பெருமகனே.
பெருங்காதல் என்னோடு, பொன்னோடை நெற்றி மருங்கார வார்செவிகள் வீசி - ஒருங்கே திருவார்ந்த செம்முகத்துக் கார்மதங்கள்சோர வருவான்தன் நாமம் வரும்.
வருகோள் தருபெருந் தீமையும், காலன்தமரவர்கள் அரு(கு)ஒட் டருமவ ராண்மையும் காய்பவன்,கூர்ந்தன்பு தருகோள் தருமர பிற்பத்தர் சித்தத்தறியணையும் ஒருகோட்(டு) இருசெவி முக்கண்செம் மேனியஒண்களிறே.
களியானைக், கன்றைக் கணபதியைச்,செம்பொன் ஒளியானைப் பாரோர்க்(கு) உதவும் - அளியானைக் கண்ணுவதும், கைத்தலங்கள் கூப்புவதும்,மற்றவன்தாள் நண்ணுவதும் நல்லார் கடன்.
நல்லார் பழிப்பில் எழிற்செம் பவளத்தைநாணநின்ற பொல்லா முகத்(து)எங்கள் போதக மே!புரம்மூன்றெரித்த வில்லான் அளித்த விநாயக னே!யென்றுமெய்ம்மகிழ வல்லார் மனத்தன்றி, மாட்டான் இருக்கமலர்த்திருவே.