திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தொழுது புனல் மேல் எழும் தொண்டர் தூய மலர்க்கண் பெற்று எழுந்தார்;
பொழுது தெரியாவகை அமரர் பொழிந்தார் செழும் தண்பூமாரி;
இழுதை அமணர் விழித்தே கண் இழந்து தடுமாறக் கண்டு,
பழுது செய்த அமண் கெட்டது என்று மன்னன் பகர்கின்றார்.

பொருள்

குரலிசை
காணொளி