பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு
அந்தி மதிமுகிழான்; அந்தியஞ்செந்நிறத்தான்; அந்தியே போலும் அவிர்சடையான் - அந்தியின் தூங்கிருள்சேர் யாமமே போலும் சுடுநீற்றான் வீங்கிருள்சேர் நீல மிடறு.
மிடற்றாழ் கடல்நஞ்சம் வைக்கின்றஞான்று,மெல் லோதிநல்லாள் மடற்றா மரைக்கைகள் காத்தில வே!மழுவாளதனால் அடற்றா தையைஅன்று தாளெறிந் தாற்கருள்செய்தகொள்கைக் கடற்றாழ் வயற்செந்நெல் ஏறும்வெண்காட்டெங் கரும்பினையே.
கருப்புச் சிலைஅநங்கன் கட்டழகு சுட்ட நெருப்புத் திருநெற்றி நாட்டம்; -திருச்சடையில் திங்கள் புரையும் திரள்பொன் திருமேனி; எங்கள் இமையோர் இறைக்கு
இறைக்கோ குறைவில்லை? உண்(டு);இறை யே;எழிலார்எருக்கு நறைக்கோ மளக்கொன்றை துன்றும் சடைமுடிநக்கர்சென்னிப் பிறைக்கோர் பிளவும் பெறுவிளிக் கொண்டெம்பிரான்உடுக்கும் குறைக்கோ வணமொழிந் தாற்பின்னை ஏதுங்குறைவில்லையே.
இல்லை பிறவிக் கடலேறல்; இன்புறவில் முல்லை கமழும் முதுகுன்றில் - கொல்லை விடையானை, வேதியனை, வெண்மதிசேர்செம்பொற் சடையானைச் சாராதார் தாம்.
தாமரைக் கோவும்நன் மாலும் வணங்கத்தலையிடத்துத் தாம்அரைக் கோவணத் தோ(டு)இரந் துண்ணினுஞ்,சார்ந்தவர்க்குத் தாமரைக் கோமளத் தோடுஉல காளத்தருவர்கண்டீர்; தாமரைக் கோமளக் கைத்தவ ளப்பொடிச்சங்கரரே.
சங்குகோள் எண்ணுவரே பாவையரைத், தம்அங்கம் பங்குபோய் நின்றாலும்; பாய்கலுழிக் - கங்கை வரியராப் போதும் வளர்சடையாய், நின்போல் பெரியர்ஆ வாரோ பிறர்.
பிறப்பாழ் குழியிடை வீழ்ந்துநை வேற்குநின்பேரருளின் சிறப்பார் திருக்கை தரக்கிற்றி யே?திரியும்புரமூன்(று) அறப்பாய் எரியுற, வான்வரை வில்வளைத்(து)ஆய்இரவாய் மறப்பா வரியர நாணிடைக் கோத்தகை வானவனே.
வானம் மணிமுகடா, மால்வரையே தூணாக, ஆன பெரும்பார் அரங்காகக் - கானகத்தில் அம்மா முழவதிர ஆடும் பொழு(து) ஆரூர் எம்மானுக் கெய்தா திடம்.
இடப்பா கமுமுடை யாள்வரை யின்இள வஞ்சியன்ன மடப்பால் மொழியென்பர்; நின்வலப் பாகத்துமான்மழுவும்; விடப்பா சனக்கச்சும்; இச்சைப் படநீறணிந்துமிக்க கடப்பார் களிற்றுரி கொண்டுஎங்கும் மூடும்எங்கண்ணுதலே.
கண்ணி இளம்பிறையும், காய்சினத்த மாசுணமும் நண்ணி இருந்தால் நலம்இல்லை; - தண்அலங்கல் பூங்கொன்றை யின்தேன் பொதியுஞ்சடைப்புனிதா, வாங்கொன்றை இன்றே மதித்து.
மதிமயங் கப்பொங்கு கோழிருள் கண்டவ,விண்டவர்தம் பதிமயங் கச்செற்ற கொற்றவில் வானவ,நற்றவர்சூழ் அதிகைமங் கைத்திரு வீரட்ட, வாரிட்டதேனுமுண்டு கதிமயங் கச்செல்வ தேசெல்வ மாகக் கருதுவதே?
கருதுங் கருத்துடையேன்; கையுடையேன் கூப்பப்; பெரிதும் பிறதிறத்துப் பேசேன், - அறிதன்றே யாகப், பிறையான் இனியென் அகம்புகுந்து போகப் பெறுமோ புறம்.
புறமறை யப்புரிபுன்சடை விட்(டு)எரி பொன்திகழும் நிறமறை யத்திரு நீறு துதைந்தது; நீள்கடல்நஞ்(சு) உறமறை யக்கொண்ட கண்டமும் சாலஉறைப்புடைத்தால், அறமறை யச்சொல்லி வைத்(து)ஐயம் வேண்டும்அடிகளுக்கே
அடியோமைத் தாங்கியோ ? ஆடை யுடுத்தோ ? குடியோம்ப மாநிதியங் கொண்டோ ? -பொடியாடும் நெற்றியூர் வாளரவ நீள் சடையாய், நின்ஊரை ஒற்றியூர் ஆக்கிற் றுரை.
உரைவந் துறும்பதத் தேயுரை மின்கள்,அன்றாயினிப்பால் நரைவந் துறும்பின்னை வந்துறுங் காலன்;நன் முத்(து)இடறித் திரைவந் துறுங்கரைக் கேகலம் வந்துறத் திண்கை,வன்றாள் வரைவந் துறுங்கடல் மாமறைக் காட்(டு)எம்மணியினையே.
மணியமரும் மாமாட வாய்மூரான் தன்னை அணியமர ரோடயனும், மாலும், - துணிசினத்த செஞ்சூட்ட சேவற் கொடியானு மாய்நின்று நஞ்சூட்ட எண்ணியவா நன்று.
நன்றைக் குறும்இரு மல்பெரு மூச்சுநண்ணாதமுன்னம் குன்றைக் குறுவது கொண்டழி யா(து)அறி வீர்,செறிமின்; கொன்றைக் குறுநறுங் கண்ணியி னான்றன்கொய்பூங்கயிலைக் குன்றைக் குறுகரி தேனும்உள் ளத்திடைக்கொள்மின்களே.
கொண்ட பலிநுமக்கும், கொய்தார்க்குமரர்க்கும், புண்டரிக மாதினுக்கும் போதுமே ? - மண்டி உயிரிழந்தார் சேர்புறங்காட் டோரிவாய்ஈர்ப்ப மயிரிழந்த வெண்டலைவாய் வந்து.
வந்தா றலைக்கும் வலஞ்சுழி வானவ, வானவர்தம் அந்தார் மகுடத் தடுத்தபைம் போதில்அந்தேனுழக்கிச் செந்தா மரைச்செவ்வி காட்டும் திருவடிக்குஞ்செல்லுமே. எந்தாய் அடித்தொண்டர் ஒடிப் பிடித்திட்டஇன்மலரே.
மலர்ந்த மலர்தூவி, மாமனத்தைக் கூப்பிப், புலர்ந்தும் புலராத போதும், - கலந்திருந்து கண்ணீர் அரும்பக் கசிவார்க்குக்காண்பெளியன். தெண்ணீர் சடைக்கரந்த தே.
தேவனைப், பூதப் படையனைக், கோதைத்திருஇதழிப் பூவனைக், காய்சினப் போர்விடை தன்னொடும்போற்றநின்ற மூவனை, ஈருரு வாயமுக் கண்ணனை, முன்னுமறை நாவனை நான்மற வேன்இவை நான்வல்ல ஞானங்களே.
நானுமென் நல்குரவும் நல்காதார் பல்கடையில் கானிமிர்த்து நின்றிரப்பக் கண்டிருக்கும்; -வானவர்கள் தம்பெருமான், மூவெயிலும் வேவச் சரந்தூற்றல் எம்பெருமான் என்னா இயல்பு.
இயல்,இசை, நாடக மாய்,ஏழு வேலைக ளாய்,வழுவாப் புயலியல் விண்ணொடு மண்முழு தாய்ப்பொழுதாகிநின்ற, மயிலியல் மாமறைக் காடர்,வெண் காடர்,வண் தில்லை,மல்கு கயலியல் கண்ணிபங் காரன்பர் சித்தத்தடங்குவரே.
அடங்காதார் ஆரொருவர் ? அங்கொன்றை துன்று மடங்காதல் என்வளைகொள் வார்த்தை -நுடங்கிடையீர் ஊரூரன் சென்றக்கால் உண்பலிக்கென் றங்ஙனே ஆரூரன் செல்லுமா றங்கு.
அங்கை மறித்தவ ராலவி உண்ணுமவ் வானவர்கள் தங்கை மறித்தறி யார்தொழு தேநிற்பர்,தாழ்சடையின் கங்கை மறித்தண வப்பண மாசுணக் கங்கணத்தின் செங்கை மறித்திர விற்சிவன் ஆடுந்திருநட்டமே.
நட்டம்நீ ஆடும் பொழுதத்து, நல்லிலயம் கொட்டக் குழிந்தொழிந்த வாகொல்லோ! -அட்டுக் கடுங்குன்ற மால்யானைக் காருரிவை போர்த்த கொடுங்குன்ற, பேயின் கொடிறு.
கொடிறு முரித்தனன் கூலாளன்; நல்லன்,குருகினஞ்சென்(று) இடறுங் கழனிப் பழனத் தரசை; எழிலிமையோர் படிறு மொழிந்து பருகக் கொடுத்துப் பரவைநஞ்சம் மிடறு தடுத்தது வும்மடி யேங்கள் விதிவசமே.
விதிகரந்தவெவ்வினையேன் மென்குழற்கே,வாளா, மதுகரமே, எத்துக்கு வந்தாய்? -நதிகரந்த, கொட்டுக்காட் டான்சடைமேற் கொன்றைக்குறுந்தெரியல் தொட்டுக்காட் டாய்;சுழல்வாய் தொக்கு.
தொக்கு வருங்கணம் பாடத்தொல் நீறணித்தேநிலவு நக்கு வருங்கண்ணி குடிவந் தார்;நறும்புன்னைமுன்னம் அக்கு வருங்கழிக் கானல்ஐ யாறரைக் காணஅன்பு மிக்கு வரும்அரும்; போதரைக் காண வெள்குவனே.
வெள்காதே, உண்பலிக்கு வெண்டலைகொண்டூர்திரிந்தால், எள்காரே வானவர்கள்? எம்பெருமான், - வள்கூர் வடதிருவீ ரட்டானத் தென்னதிகை மங்கைக் குடதிருவீ ரட்டானங் கூறு.
கூறு பெறுங்கன் னி சேர்கருங் கூந்தல்சுண்ணந்துதைந்து, நீறு பெறுந்திரு மேனி நெருப்புப்புரைபொருப்பொத்(து) ஆறு பெறுஞ்சடை அங்கொன்றை யந்தேன்துவலைசிந்த வீறு பெறுஞ்சென்று சென்றெம் பிரானுக்குவெண்ணிறமே.
நிறம்பிறிதாய், உள்மெலிந்து, நெஞ்சுருகி,வாளா புறம்புறமே நாள்போக்கு வாளோ! - நறுந்தேன் படுமுடியாய்ப்பாய்நீர் பரந்தொழுகும் பாண்டிக் கொடுமுடியாய், என்றன் கொடி.
கொடிக்குல வும்மதிற் கோவலூர் வீரட்ட,கோளரவம் பிடிக்கில அம்முடிப்; பூணலை; யத்தொடுமால்விடையின் இடிக்குரல் கேட்(டு)இடி என்றிறு கக்கடிவாளெயிற்றால் கடிக்க லுறுமஞ்சி, நஞ்சம் இருந்தநின்கண்டத்தையே.
கண்டம் நிறங்கறுப்பக் கவ்வைக்கருங்கடல்நஞ்(சு) உண்டல் புரிந்துகந்த உத்தமற்குத் -தொண்டடைந்தார் கூசுவரே கூற்றைக் குறுகு வரேதீக்கொடுமை, பேசுவரே மற்றொருவர் பேச்சு.
பேய்ச்சுற்றம் வந்திசை பாடப் பிணமிடுகாட்டயலே தீச்சுற்ற வந்துநின் றாடலென் னாம்?செப்பு;முப்பொழுதும் கோச்சுற்ற மாக்குடை வானவர் கோன்,அயன்மால்முதலா மாச்சுற்றம் வந்திறைஞ் கந்திருப் பொற்சடைமன்னவனே.
மன்னும் பிறப்பறுக்கும் மாமருந்து; வாளரக்கன் துன்னுங் சுடர்முடிகள் தோள்நெரியத் - தன்னைத் திருச்சத்தி முற்றத்தான் சித்தத்துள்வைத்தான் திருச்சத்தி முற்றத்தான் தேசு.