பொது நிகழ்வுகள் | தொடர்புக்கு | எங்களைப் பற்றி | உறுப்பினர் பதிவு
திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்
77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்
வேழத்து அரசு அங்கண் விரைந்து நடந்து சென்று, வாழ்வு உற்று உலகம் செய் தவத்தினின், வள்ளலாரைச் சூழ் பொன் சுடர் மா மணி மா நிலம் தோய, முன்பு தாழ்வு உற்று எடுத்துப் பிடர் மீது தரித்தது அன்றே.