திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சாலியின் கற்றை துற்ற தடவரை முகடு சாய்த்துக்
கால் இரும் பகடு போக்கும் கரும் பெரும் பாண்டில் ஈட்டம்,
ஆலிய முகிலின் கூட்டம் அருவரைச் சிமயச் சாரல்
மேல் வலம் கொண்டு சூழும் காட்சியின் மிக்கது அன்றே.

பொருள்

குரலிசை
காணொளி