திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

புனை மலர் மென் கரங்களினால் போற்றிய தாதியர் நடுவண்
மனை அகத்து மணிமுன்றில் மணல் சிற்றில் இழைத்து, மணிக்
கனை குரல் நூபுரம் அலையக் கழல் முதலாப் பயின்று, முலை
நனை முகம் செய் முதல் பருவம் நண்ணினள் அப் பெண் அமுதம்.

பொருள்

குரலிசை
காணொளி