வேத நான் முகன் மால் புரந்தரன் முதலாம் விண்ணவர் எண்ணிலார் மற்றும்
காதலால் மிடைந்த முதல் பெருந் தடையாம் கதிர் மணிக் கோபுரத்து உள்ளான்
பூத வேதாளம் பெரும் கண நாதர் போற்றிடப் பொதுவில் நின்று ஆடும்
நாதனார், ஆதி தேவனார், கோயில் நாயகன்; நந்தி எம் பெருமான்.