பன்னிரு திருமுறை - சைவ சமய பாடல்களின் தொகுப்பு

நம்பியாண்டார் நம்பிகள் / ஆளுடைய பிள்ளையார் திருக்கலம்பகம்
வ.எண் பாடல்
1

அலையார்ந்த கடலுலகத்(து) அருந்திசைதோ(று) அங்கங்கே
நிலையார்ந்த பலபதிகம் நெறிமனிதர்க்(கு) இனி தியற்றி
ஈங்கருளி யெம்போல்வார்க்(கு) இடர்கெடுத்தல் காரணமா
ஓங்குபுகழ்ச் சண்பையெனு மொண்பதியு ளுதித்தனையே.
செஞ்சடைவெண் மதியணிந்த சிவனெந்தை திருவருளால்
வஞ்சியன நுண்ணிடையாள் மலையரையன் மடப்பாவை
நற்கண்ணி யளவிறந்த ஞானத்தை யமிர் தாக்கிப்
பொற்கிண்ணத்(து) அருள்புரிந்த போனகமுன் நுகர்ந்தனையே
தோடணிகா தினனென்றுந் தொல்மரர்க் கெஞ்ஞான்றும்
தேடரிய பராபரனைச் செழுமறையின் அரும்பொருளை
அந்திச்செம் மேனியனை யடையாளம் பலசொல்லி
உந்தைக்குக் காண,வர னுவனாமென்(று) உரைத்தனையே
அராகம்

வளம்மலி தமிழிசை வடகலை மறைவல
முளரிநன் மலரணி தருதிரு முடியினை.
(1)

கடல்படுவிடமடை கறைமணி மிடறுடை
அடல்கரி யுரியனை யறிவுடை யளவினை.

(2)

பெயர்த்தும் தாழிசை

கரும்பினுமிக் கினியபுகழ்க் கண்ணுதல்விண் ணவன்அடிமேல்
பரம்பவிரும் புவியவர்க்குப் பத்திமையை விளைத்தனையே.

(1)

பன்மறையோர் செய்தொழிலும், பரமசிவா கமவிதியும்
நன்மறையின் விதிமுழுதும் ஒழிவின்றி நவின்றனையே.

(2)

நாற்சீர் ஓரடி அம்போதரங்கம்

அணிதவத் தவர்களுக்(கு) அதிகவித் தகனும்நீ; (1)
தணிமனத் தருளுடைத் தவநெறித் கமிர்தம்நீ; (2)
அமணரைக் கழுநுதிக் கணைவுறுத் தவனும்நீ: (3)
தமிழ்நலத் தொகையினில் தகுகவைப் பவனும்நீ; (4)

மூச்சீர் ஓரடி அம்போதரங்கம்

மறையவர்க் கொருவன் நீ: (1)
மருவலர்க் குருமு நீ; (2)
நிறைகுணத் தொருவன் நீ; (3)
நிகரில்உத் தமனும் நீ; (4)
இருசீர் ஓரடி அம்போதரங்கம்

அரியை நீ; (1)
அறவன் நீ; (3) எளியை நீ; (2)
துறவன் நீ; (4)
பெரியை நீ; (5)
பிள்ளை நீ; (7) உரியை நீ; (6)
வள்ளல் நீ; (8)
தனிச்சொல்

எனவாங்(கு)

சுரிதகம்

அருந்தமிழ் விரக! நிற் பரசுதும் திருந்திய
நிரைச்செழு மாளிகை நிலைதொறும் நிலைதொறும்
உரைச்சதுர் மறையின் ஓங்கிய ஒலிசேர்
சீர்கெழு துழனித் திருமுகம் பொலிவுடைத்
5. தார்கெழு தண்டலை தண்பணை தழீஇ
கற்றொகு புரிசைக் காழியர் நாத!
நற்றொகு சீர்த்தி ஞானசம் பந்த!
நின்பெருங் கருணையை, நீதிநின்
அன்புடை அடியவர்க்(கு) அருளுவோய் எனவே.

2

எனவே இடர் அகலும்; இன்பமே எய்தும்;
நனவே அரன் அருளை நாடும்; - புனல்மேய
செங்கமலத் தண்தார்த் திருஞான சம்பந்தன்
கொங்கமலத் தண்தாழிக் கோ.

3

கோலப் புலமணிச் சுந்தர மாளிகைக் குந்தள, வார்
ஏலப் பொழிலணி சண்பையர் கோனை, இருங்கடல் சூழ்
ஞாலத் தணிபுகழ் ஞானசம் பந்தன நற்றிமிழே
போலப் பலபுன் கவிகொண்டு சேவடி போற்றுவனே.

4

போற்று வார்இடர் பாற்றிய புனிதன்,
பொழில்சு லாவிய புகலியர் பெருமான்,

ஏற்ற வார் புகழ் ஞானசம் பந்தன்
எம்பி ரான் இருஞ் சுருதியங் கிரிவாய்ச்

சேற்று வார்புனம் காவல் புரிந்தென்
சிந்தை கொள்வ(து) உம் செய்தொழி லானால்,

மாற்றம் நீர்எமக்(கு) இன்(று) உரை செய்தால்
வாசி யோ! குற மாதுநல்லீரே.

5

நலமலி தரும்புவனி நிறைசெய்புகழ் இன்ப நனி
பனிமதி அணைந்த பொழில்சூழ்

பொலமதில் இரும்புகலி அதிபதி, விதம்பெருகு
புனிதகுணன், எந்தம் இறைவன்,

பலமலி தரும்தமிழின் வடகலை விடங்கன், மிகு
பரசமய வென்றி அரிதன்

சலமலி தரும்கமல சரண் நினைவன், என்றனது
தகுவினைகள் பொன்றும் வகையே.

6

வகைதகு முத்தமிழ் ஆகரன், மறைபயில் திப்பிய வாசகன்
வலகலை வித்தகன், வானவில் மதிஅணை பொற்குவை மாளிகை

திகைதிகை மட்டலர் வார்பொழில் திகழ் புக லிக்கர சாகிய
திருவளர் விப்ர சிகாமணி, செழுமல யத்தமிழ்க் கேசரி

மிகமத வெற்றிகொள் வாரணம், மிடைவரு டைக்குலம் யாளிகள்
விரவிரு ளில்தனி நீள்நெறி வினைதுயர் மொய்த்துள வே; மணி

நகைஎழி லிற்குற மா(து) உன(து) அருமை நினைக்கிலள்; நீ இவண்
நசையின் முழுப்பதி ஆதல்முன் நணுகல்; இனிக்கிரி வாணனே.

7

வாணில வும், புனலும் பயில் செஞ்சடை வண்கரு ணாகரனை
மலைமா துமையொடு மிவனா வானென முன்னாளுரை செய்தோன்

சேணில வும்புகழ் மாளிகை நீடிய தென்புக லிக்கரசைத்
திருவா ளனையெழி லருகா சனிதனை மருவா தவர்கிளைபோல்

நாணில வும்பழி யோகரு தா(து)அய லானொரு காளையுடன்
நசைதீர் நிலைகொலை புரிவே டுவர்பயில் தருகா னதர்வெயிலிற்

கேணில வுங்கிளி பாவையொ டாயமும் யாயெனை யும்மொழியக்
கிறியா லெனதொரு மகள்போ யுறுதுயர் கெடுவேனறிகிலேனே

8

அறிவாகி யின்பஞ்செய் தமிழ்வாதில் வென்றந்த
அமணான வன்குண்டர் கழுவேற முன்கண்ட

செறிமாட வண்சண்பை நகராளி யென்தந்தை
திருஞான சம்பந்த னணிநீடு திண்குன்றில்,

நெறியால மண்துன்றி முனைநாள்சி னங்கொண்டு
நிறைவார் புனந்தின்று மகள்மேல் வருந்துங்க,

வெறியார் மதந்தங்கு கதவா ரணங்கொன்ற,
வெகுளாத நஞ்சிந்தை விறலா னுளன்பண்டே.

9

பண்டமுது செய்ததுமை நங்கையருள் மேவுசிவ ஞானம்,
பைந்தரள நன்சிவிகை, செம்பொனணி நீடுகிற தாளம்

கொண்டதர னும்பர்பர னெங்கள்பெரு மானருள் படைத்துக்
கொடுத்ததமி ழைத்தவகு லத்தவர்க ளுக்குலகி லின்பம்

கண்ட(து)அரு கந்தர்குல மொன்றிமுழு துங்கழுவி லேறக்
கறுத்தது வினைப்பயன், மனத்திலிறை காதலது அன்றி

விண்டதுவும் வஞ்சகரை; மஞ்சணவு கின்றமணி மாட
வேணுபுர நாதன்மிகு வேதியர்சி காமணி பிரானே.

10


பிரானை மெய்த்திரு ஞானசம் பந்தனை மறையவர்பெருமானைக்
குராம லர்ப்பொழிற் கொச்சையர் நாதனைக் குரைகழ லிணைவாழ்த்தித்
தராத லத்தினி லவனருள் நினைவொடு தளர்வுறு தமியேனுக்(கு)
இராவி னைக்கொடு வந்ததிவ் அந்திமற்(று) இனிவிடி(வு) அறியேனே.

11

ஏனமு கத்தவ புத்தரை யிந்திர சித்து மணம்புணர் வுற்றான்
ஈழவ னார்சொரி தொட்டி யினங்களை வெட்டி யிசித்தனர் பட்டர்

தான மிரக்கிற சீதை மடுப்பது சாதி குடத்தொடு கண்டீர்;
சக்கர வர்த்திகள் சிக்கர மட்டுவர் தத்துவம் இப்பரிசுண்டே

ஆன புகழ்ப்பயில் விப்ர சிகாமணி அத்தகு மைப்புரையுங்கார்
ஆர்பொழில் நீடிய சண்பையர் காவலன் வண்களியேனெளி யேனோ

சோனக னுக்குமெ னக்குமெனத்தரை யம்மனை சூலது கொண்டாள்;
தும்புரு வாலியை வென்று நிலத்திடை நின்று துலுக்குகிறாரே.

12

ஆர்மலி புகலி நாத னருளென இரவில் வந்(து)என்
வார்முலை பயலை தீர மணந்தவர் தணந்து போன
தேரத ரழிய லும்மைச் செய்பிழை யெம்ம தில்லை
கார்திரை கஞலி மோதிக் கரைபொருங் கடலி னீரே.

13


கடல்மேவு புவியேறு கவிநீரர் பெருமான்றன்

தடமாடு மிகுகாழி தகுபேதை யருளாமல்

திடமாகி லணிநீறு செழுமேனி முழுதாடி
மடலேறி யெழில்வீதி வருகாத லொழியேனே.

14

ஒழியா(து) இன்புறு பொழில்சூழ் சண்பைமன்
உயர்பார் துன்றிய தகுஞா னன்புகழ்

எழிலா ருங்கவு ணியர் தீ பன்திகழ்
இணையார் செங்கரன் நிகழ்வான் விண்குயின்

பொழியா நின்றன துளிதார் கொன்றைகள்
புலமே துன்றின; கலைமா னொன்றின;

பழிமேல் கொண்டது நமர்தே ரன்பொடும்
அருகே வந்தது அதுகாண் மங்கையே.

15

மங்கை யிடத்தர னைக்கவி நீரெதி ரோட மதித்தருள்செய்
தங்கு புகழ்ச்சதுர் மாமறை நாவளர் சைவசி காமணிதன்
துங்க மதிற்பிர மாபுரம் மேவிய சூழ்பொழில் நின்றொளிர்மென்
கொங்கை யுடைக்கொடி யேரிடை யாள்குடி கொண்டன ளெம்மனமே.

16

மனங்கொண்டு நிறைகொண்டு கலையுங் கொண்டு
மணிநிறுமு மிவள்செங்கை வளையுங் கொண்ட

தனங்கொண்ட பெருஞ்செங்கை திகழுங் கீர்த்திச்
சண்பையர்கோன் திருஞான சம்பந் தற்கு
நனங்கொண்டு மெய்கொண்டு பயலை கொண்டே
நன்னுதலா ளயர்கின்றாள் நடுவே நின்றும்

இனங்கொண்டு நகைகொண்டு மடவீர் வாளா
என்செயநீ ரலர்தூற்றி எழுகின் றீரே.

17

எழுகுலவெற்பிவை மிடறி லடக்குவன்
எறிகட லிற்புனல் குளறிவ யிற்றினில்

முழுது மொளித்திர வியையிந்நிலத்திடை
முடுகுவ னிப்பொழு திவையல விச்சைகள்

கழுமல நற்பதி யதிப தமிழ்க்கடல்
கவுணிய நற்குல திலக னிணைக்கழல்

தொழுது வழுத்திய பிறகொரு வர்க்குறு
துயர்வரு விப்பனி தரியதொர் விச்சையே.

18

சயமி குத்தரு கரைமு ருக்கிய தமிழ்பயிற்றிய நாவன்
வியலி யற்றிரு மருக லிற்கொடு விடம ழித்தருள் நீதன்
கயலு டைப்புனல் வயல்வ ளத்தகு கழும லப்பதி நாதன்
இயலு டைக்கழல் தொழநி னைப்பவ ரிருவி னைத்துயர் போமே.

19

மேதகுந் திகழ்பூக நாகசண் பகசூத
வேரிவண் டறைசோலை யாலைதுன் றியகாழி

நாதனந் தணர்கோனெ னானைவண் புகழாளி
ஞானசுந் தரன்மேவு தார்நினைந் தயர்வேனை

நீதியன்றின பேசும் யாயுமிந் துவும்வாசம்
நீடுதென் றலும்வீணை யோசையுங் கரைசேர

மோதுதெண் திரைசேவல் சேருமன் றிலும்வேயும்
மூடுதண் பனிவாடை கூடிவன் பகையாமே,

20

1344. வன்பகை யாமக் குண்டரை வென்றோய்!
மாமலர் வாளிப் பொருமத வேளைத்

தன்பகை யாகச் சிந்தையுள் நையும்
தையலை யுய்யக் கொண்டருள் செய்யாய்;

நின்புகழ் பாடிக் கண்பனி சோரா
நின்றெழில் ஞானா என்றகம் நெக்கிட்(டு)

அன்பக லாமெய்ச் சிந்தைய ரின்பாம்
அம்பொழில் மாடச் சண்பையர் கோவே.

21

கோவின்திரு முக மீதொடு வருதூதுவ! ஈரக்
குளிர்பைம்பொழில் வள நாடெழில் நிதியம்பரி ஈசம்

மாவீரிய ரிவர் தங்கையென் மகுடன்திற மணஅம்!
மறவெங்குல மறிகின்றிலன் பழியச்சத வரசன்

பாவேறிய மதுரத்தமிழ் விரகன்புக லியர்மன்
பயில்வண்புக ழருகாசனி பணியன்றெனின் நமர்காள்

தூவேரியை மடுமின்!துடி யடிமின்;படை யெழுமின்;
தொகுசேனையு மவனும்பட மலையும்பரி சினியே.

22

இனியின் றொழிமினிவ் வெறியும், மறியடு
தொழிலும் மிடுகுர வையுமெல்லாம்

நனிசிந் தையினிவள் மிகவன் புறுவதொர்
நசையுண்(டு) அதுநரை முதுபெண்டீர்!

புனிதன் புகலிய ரதிபன் புனைதமிழ்
விரகன் புயமுறு மரவிந்தம்

பனிமென் குழலியை யணிமின்; துயரொடு
மயலுங் கெடுவது சரதம்மே.

23

சரத மணமலி பரிசம் வருவன;
தளர்வில் புகலிய ரதிபன் அதிதரு

வரத னணி தமிழ் விரகன் மிகுபுகழ்
மருவு சுருதிநன் மலையி னமர்தரு

விரத முடையைநின் னிடையி னவள்மனம்
விரைசெய் குழலியை யணைவ தரிதென

இரதம் அழிதர வருதல் முனமினி
யெளிய தொருவகை கருது மலையனே.

24

அயன்நெடிய மாலுமவ ரறிவரிய தாணுவரன்
அருளினொடு நீடவனி யிடர்முழுது போயகல,

வயலணிதென் வீழிமிழ லையின்நிலவு காசின்மலி
மழைபொழியு மானகுண மதுரன்மதி தோய்கனக

செயநிலவு மாடம்மதில் புடை தழுவு வாசமலி
செறிபொழில்சு லாவிவளர் சிரபுரசு ரேசன்முதிர்

பயன்நிலவு ஞானதமிழ் விரகன்மறை ஞானமுணர்
பரமகுரு நாதன்மிகு பரசமய கோளரியே.

25

அரியாருங் கிரிநெறியெங் ஙனம் நீர் வந்தீர்?
அழகிதினிப் பயமில்லை யந்திக் கப்பால்

தெரியாபுன் சிறுநெறிக ளெந்தம் வாழ்விச்
சிறுகுடியின் றிரவிங்கே சிரமம் தீர்ந்திச்

சுரியார்மென் குழலியொடும் விடியச் சென்று
தொகுபுகழ்சேர் திருஞான சம்பந் தன்றன்

வரியாரும் பொழிலுமெழில் மதிலுந் தோற்றும்
வயற்புகலிப் பதியினிது மருவ லாமே.

26

ஆமாண்பொன் கூட்டகத்த வஞ்சொல் இளங்கிளியே!
பாமாலை யாழ் முரியப் பாணழியப் பண்டருள்செய்
மாமான சுந்தரன்வண் சம்பந்த மாமுனியெம்
கோமான்தன் புகழொருகா லின்புறநீ கூறாயே
கொச்சையர்கோன் தன்புகழ்யா னின்புறநீ கூறாயே.

27

கூற தாகமெய் யடிமை தானெனை யுடைய கொச்சையார் அதிபதி
வீற(து) ஆர்தமிழ் விரகன் மேதகு புகழி னானிவன் மிகுவனம்
சேற தார்தரு திரள்க ளைக்கன செழுமு லைக்குரி யவர்சினத்(து)
ஏறு தானிது தழுவி னாரென இடிகொள் மாமுர சதிருமே.

28

சதுரன், புகலிய ரதிபன்,கூர் தவசுந் தரகவு ணியர்தஞ்சீர்
முதல்வன் புகலிய ரதிபன்தாள் முறைவந் தடையலர் நகரம்போல்,
எதிர்வந் தனர்விறல் கெடவெம்போர் எரிவெங் கணைசொரி புரிமின்;கார்
அதிர்கின் றன,இது பருவஞ்சே ரலர்தம் பதிமதி லிடிமின்னே.

29

மின்னு மாகத் தெழிலி யுஞ்சேர் மிகுபொன் மாடப் புகலி வேந்தன்
துன்னும் ஞானத் தெம்பி ரான்மெய்த் தொகைசெய் பாடற் பதிக மன்னாள்
பொன்னும் மாநல் தரள முந்தன் பொருக யற்கண் தனம்நி றைந்தாள்
இன்னு மேகிப் பொருள்ப டைப்பான் எங்ங னேநா னென்ணு மாறே.

30

மாறி லாத பொடிநீ றேறு கோல வடிவும்
வம்புபம்பு குழலுந் துங்க கொங்கை யிணையும்;
ஊறி யேறு பதிகத் தோசை நேச நுகர்வும்,
ஒத்து கித்து நடையுஞ் சித்த பத்தி மிகையும்

வீற தேறும் வயல்சூழ் காழி ஞான பெருமான்
வென்றி துன்று கழலி னொன்றி நின்ற பணியும்

தேறல் போலும் மொழியும் சேல்கள் போலும் விழியும்
சிந்தை கொண்ட பரிசும் நன்றி மங்கை தவமே.

31

கைதவத்தா லென்னிடைக்கு
நீவந்த தறியேனோ? கலதிப் பாணா!
மெய்த்தவத்தா ருயிரனைய
மிகுசைவ சிகாமணியை வேணுக் கோனைச்

செய்தவத்தால் விதிவாய்ந்த
செழுமுலையா ரவனுடைய செம்பொன் திண்டோன்

எய்தவத்தால் விளிவெனக்கென்!
யாதுக்கு நீபலபொய் இசைக்கின் றாயே.

32

இசையை முகந்தெழு மிடறுமி திங்கிவன்
இடுகர ணங்களி னியல்பும் வளம்பொலி;

திசைதிசை துன்றிய பொழில்சுல வுந்திகழ்
சிரபுர மன்றகு தமிழ்விர கன்பல

நசைமிகு வண்புகழ் பயிலும் மதங்கிதன்
நளிர்முலை செங்கயல் விழிநகை கண்டபின்

வசை,தகு மென்குல மவைமுழு துங்கொள
மதிவளர் சிந்தனை மயல்வரு கின்றதே.

33

வருகின் றனனென் றனதுள் ளமும்நின்
வசமே நிறுவிக் குறைகொண் டுதணித்(து)

அருகும் புனல்வெஞ் சரம்யா னமரும்
மதுநீ யிறையுன் னினையா தெனின்முன்

கருகும் புயல்சேர் மதில்வண் புகலிக்
கவிஞன் பயில்செந் தமிழா கரன்மெய்ப்

பெருகுந் திருவா ரருள்பே ணலர்போற்
பிழைசெய் தனைவந் ததர்பெண் கொடியே.

34

கொடிநீடு விடையுடைய பெருமானை யடிபரவு
குணமேதை கவுணியர்கள் குலதீப சுபசரிதன்,

அடியேன திடர்முழுதும் அறவீசு தமிழ்விரகன்
அணியான புகலிநக ரணைவான் கனைகடலின்

முடிநீடு பெருவலைகொ டலையூடு புகுவனுமர்
முறையேவு பணிபுரிவ னணிதோணி புனைவனவை

படியாரும் நிகரரிய வரியாரும் மதர்நயனி
பணைவார்மென் முலைநுளையர் மடமாதுன் அருள்பெறினே.

35

பெறுபயன் மிகப்புவியு ளருளுவன பிற்றைமுறை

பெருநெறி யளிப்பனபல பிறவியை யொழிச்சுவன

உறுதுய ரழிப்பனமு னுமைதிரு வருட்பெருக

உடையன நதிப்புனலி னெதிர்பஃறி யுய்த்தனபுன்

நறுமுறு குரைச்சமணை நிரைகழு நிறுத்தியன

நனிகத வடைத்தனது னருவிட மகற்றியன

துறுபொழில் மதிற்புறவ முதுபதிம னொப்பரிய

தொழில்பல மிகுத்ததமிழ் விரகன கவித்தொகையே.

36

தொகுவார் பொழில்றற் றியவான் மதிதோ யுமதிற் கனமார்

தொலையா ததிருப் பொழில்மா ளிகைமா டநெருங்கியசீர்

மிகுகா ழியன்முத் தமிழா கரன்மே தகுபொற் புனைதார்

விரையார் கமலக் கழலே துணையா கநினைப் பவர்தாம்

மகரா கரநித் திலநீர் நிலையார் புவியுத் தமராய்

வரலா றுபிழைப் பி(லர்,ஊழிதொ)றூழி இலக்கிதமாய்த்

தகுவாழ்வு நிலைத் தொழில்சே ரறமா னபயிற் றுவர்மா

சதுரால் வினைசெற் றதன்மே லணுகார் பிறவிக்கடலே.

37

கருமங் கேண்மதி! கருமங் கேண்மதி!

துருமதிப் பாண கருமங் கேண்மதி!

நிரம்பிய பாடல் நின்கண் ணோடும்

அரும்பசி நலிய அலக்கணுற் றிளைத்துக்

5

காந்திய வுதரக் கனல்தழைத் தெழுதலின்


தேய்ந்துடல் வற்றிச் சில்நரம் பெழுந்தே

இறுகுபு, சுள்ளி இயற்றிய குரம்பை

உறுசெறுத் தனைய வுருவுகொண்(டு) உள்வளைஇ

இன்னிசை நல்லி யாழ்தமந்(து) அன்னம்

10

மன்னிய வளநகர் மனைக்கடை தோறும்


சென்றுழிச் சென்றுழிச் சில்பலி பெறாது

நின்றுழி நிலாவு வன்றுயர் போயொழிந்(து)

இன்புற் றிருநிதி எய்தும் அதுநுன(து)

உள்ளத்(து) உள்ள தாயின், மதுமலர்

15

வண்டறை சோலை வளவயல் அகவ,


ஒண்திறற் கோள்மீன் உலாவு குண்டகழ்

உயர்தரு வரையின் இயல்தரு பதணத்துக்

கடுநுதிக் கழுக்கடை மிடைதரு வேலிக்

கனகப் பருமுரண் கணையக் கபாட

20.

விளையக் கோபுர விளங்கெழில் வாயில்


நெகிழ்ச்சியின் வகுத்துத் திகழ்ச்சியின் ஓங்கும்

மஞ்சணை இஞ்சி வண்கொடி மிடைந்த

செஞ்சுடர்க் கனகத் திகழ்சிலம் பனைய

மாளிகை ஒளிச் சூளிகை வளாகம்

25.

அணியுடைப் பலபட மணிதுடைத் தழுத்திய


நல்லொளி பரந்து நயந்திகழ் இந்திர

வில்லொளி பலபல விசும்பிடைக் காட்ட

மன்னிய செல்வத்துத் துன்னிய பெருமைச்

செம்மலர் மாது சேர்ந்திறை பிரியாக்

30.

கழுமல நாதன், கவுணியர் குலபதி,


தண்டமிழ் விரகன், சைவ சிகாமணி,

பண்டிதர் இன்பன், பாசமய கோளரி

என்புனை தமிழ்கொண்(டு), இரங்கிஎன் உள்ளத்(து)

அன்பினை யருளியஆண்தகை தன்புகழ்

35.

குறைவறுத்(து) உள்கி, நிறைகடை குறுகி


நாப்பொலி நல்லிசை பாட,

மாப்பெருஞ் செல்வம் மன்னுதி நீயே.

38

நீதியின் நிறைபுகழ் - மேதகு புகலிமன்

மாதமிழ் விரகனை - ஓதுவ(து) உறுதியே

39

உறுதிமுலை தாழ எனையிகழும் நீதி

உனதுமனம் ஆர முழுவதும்அ தாக

அறுதிபெறும் மாதர் பெயர்தருதல் தானும்

அழகி(து);இனி, யான்உன் அருள்புனைவ தாகப்

பெறுதிஇவை; நீஎன் அடிபணிதல், மேவு

பெருமைகெட நீடு படி(று);ஒழி; பொன் மாடம்

நறைகமழும் வாச வளர்பொழில் சுலாவும்

நனிபுகலி நாத! தமிழ்விரக! நீயே

40

நீமதித் துன்னிநினை யேல்,மட நெஞ்சமே!

காமதிக் கார்பொழிற் காழி

நாமதிக் கும்புகழ் ஞானசம் பந்தன்ஒண்

பூமதிக் கும்கழல் போற்றே.

41

போற்றி செய்(து)அரன் பொற்கழல் பூண்டதே;

புந்தி யான்உந்(து)அம் பொற்கழல் பூண்டதே;

மாற்றி யிட்டது வல்விட வாதையே;

மன்னு குண்டரை வென்றது வாதையே;

ஆற்றெ திர்ப்புனல் உற்ற(து)அம் தோணியே;

ஆன தன்பதி யாவ(து)அம் தோணியே

நாற்றி சைக்கவி ஞானசம் பந்தனே;

நல்ல நாமமும் ஞானசம் பந்தனே.

42

அம்புந்து கண்இமைக்கும்; ஆன நுதல்வியர்க்கும்;

வம்புந்து கோதை மலர்வாடும்; - சம்பந்தன்

காமரு கழுமலம் அனையா

ளாம்இவள் அணங்கலள்; அடிநிலத் தனவே.

43

தனமும், துகிலும், சாலிக் குலையும் கோலக் கனமாடச்

சண்பைத் திகழ்மா மறையோர் அதிபன், தவமெய்க் குலதீபன்

கனவண் கொடைநீ(டு) அருகாசனிதன் கமலக் கழல்பாடிக்

கண்டார் நிறையக் கொள்ளப், பசியைக் கருதா(து) எண்பாணர்

புனைதண் தமிழின் இசைஆர் புகலிக் கரசைப் புகழ்பாடிப்

‘புலையச் சேரிக் காளை புகுந்தால்’ என்சொல் புதிதாக்கிச்

சினவெங் கதமாக் களிறொன் றிந்தச் சேரிக் கொடுவந்தார்

சேரிக் குடிலும் இழந்தார்; இதனைச் செய்குவ(து) அறியாரே

44

யாரேஎன் போல அருளுடையார்! இன்கமலத்
தாரேயும் சென்னித் தமிழ்விரகன் - சீரேயும்
கொச்சை வயன்றன் குரைகழற்கே - மெச்சி
அடிமைசெயப் பெற்றேன் அறிந்து.

45

அறிதரு நுண்பொருள் சேர்பதி கம்அரன் - கழல்மேல்
அணிதரு சுந்தரம் மலிதமிழ் விரகன், - பிறைதோய்

செறிதரு பைம்பொழில் மாளிகை சுலவும் - திகழ்சீர்த்
திருவளர் சண்பையின் மாடலை கடல்ஒண் - கழிசேர்

எறிதிரை வந்தெழு மீன்இரை நுகர்கின் - றிலைபோய்
இனமும் அடைந்திலை; கூர்இடரோடிருந் - தனையால்;

உறுதுயர் சிந்தையி னூடுத வினர்எம் - தமர்போல்
உமரும் அகன்றன ரோ? இது உரைவண் - குருகே.

46

குருகணி மணிமுன் கைக்கொடி யும்,நல் விறலவனும்

அருகணை குவர்;அப் பால்அரி(து) இனிவழி; மீள்மின்;

தருகெழு முகில்வண் கைத்தகு தமிழ்விர கன்றன்

கருகெழு பொழில்மா டக்கழு மலவள நாடே.

47

நாடே றும்புகழ் ஞானசம் பந்தன்வண்

சேடே றும்கொச்சை நேர்வளம் செய்துனை,

மாடே றும்தையல் வாட, மலர்ந்தனை;

கேடே றும்கொடி யாய்;கொல்லை முல்லையே

48


முல்லை நகைஉமைதன் மன்னு திருவருளை

முந்தி உறுபெரிய செந்தண் முனிவன்,மிகு

நல்ல பொழில்சுலவு தொல்லை அணிபுகலி

நாதன், மறைமுதல்வன் வேத மலையதனில்

வில்லை யிலர்;கணையும் இல்லை; பகழிஉறு

வேழம் இரலைகலை, கேழல் வினவுறுவர்;

சொல்லை இலர்,விரக ரல்லர்; தழை கொணர்வர்;

தோழி!இவர்ஒருவர் ஆவ! அழிதர்வரே.

49

எழில்தருபிற வியின்உறு - தொழில் அமர்துயர் கெடும்மிகு

பொழிலணி தருபுகலிமன் - எழிலிணையடி இசைமினே.