ஏனமு கத்தவ புத்தரை யிந்திர சித்து மணம்புணர் வுற்றான்
ஈழவ னார்சொரி தொட்டி யினங்களை வெட்டி யிசித்தனர் பட்டர்
தான மிரக்கிற சீதை மடுப்பது சாதி குடத்தொடு கண்டீர்;
சக்கர வர்த்திகள் சிக்கர மட்டுவர் தத்துவம் இப்பரிசுண்டே
ஆன புகழ்ப்பயில் விப்ர சிகாமணி அத்தகு மைப்புரையுங்கார்
ஆர்பொழில் நீடிய சண்பையர் காவலன் வண்களியேனெளி யேனோ
சோனக னுக்குமெ னக்குமெனத்தரை யம்மனை சூலது கொண்டாள்;
தும்புரு வாலியை வென்று நிலத்திடை நின்று துலுக்குகிறாரே.