போற்றி செய்(து)அரன் பொற்கழல் பூண்டதே;
புந்தி யான்உந்(து)அம் பொற்கழல் பூண்டதே;
மாற்றி யிட்டது வல்விட வாதையே;
மன்னு குண்டரை வென்றது வாதையே;
ஆற்றெ திர்ப்புனல் உற்ற(து)அம் தோணியே;
ஆன தன்பதி யாவ(து)அம் தோணியே
நாற்றி சைக்கவி ஞானசம் பந்தனே;
நல்ல நாமமும் ஞானசம் பந்தனே.