மேதகுந் திகழ்பூக நாகசண் பகசூத
வேரிவண் டறைசோலை யாலைதுன் றியகாழி
நாதனந் தணர்கோனெ னானைவண் புகழாளி
ஞானசுந் தரன்மேவு தார்நினைந் தயர்வேனை
நீதியன்றின பேசும் யாயுமிந் துவும்வாசம்
நீடுதென் றலும்வீணை யோசையுங் கரைசேர
மோதுதெண் திரைசேவல் சேருமன் றிலும்வேயும்
மூடுதண் பனிவாடை கூடிவன் பகையாமே,