முல்லை நகைஉமைதன் மன்னு திருவருளை
முந்தி உறுபெரிய செந்தண் முனிவன்,மிகு
நல்ல பொழில்சுலவு தொல்லை அணிபுகலி
நாதன், மறைமுதல்வன் வேத மலையதனில்
வில்லை யிலர்;கணையும் இல்லை; பகழிஉறு
வேழம் இரலைகலை, கேழல் வினவுறுவர்;
சொல்லை இலர்,விரக ரல்லர்; தழை கொணர்வர்;
தோழி!இவர்ஒருவர் ஆவ! அழிதர்வரே.