போற்று வார்இடர் பாற்றிய புனிதன்,
பொழில்சு லாவிய புகலியர் பெருமான்,
ஏற்ற வார் புகழ் ஞானசம் பந்தன்
எம்பி ரான் இருஞ் சுருதியங் கிரிவாய்ச்
சேற்று வார்புனம் காவல் புரிந்தென்
சிந்தை கொள்வ(து) உம் செய்தொழி லானால்,
மாற்றம் நீர்எமக்(கு) இன்(று) உரை செய்தால்
வாசி யோ! குற மாதுநல்லீரே.