திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சேவடியில் தொடு தோலும் செங்கையினில் வெண் கோலும்
மேவும் இசை வேய்ங் குழலும் மிக விளங்க, வினை செய்யும்
காவல் புரி வல் ஆயர் கன்று உடை ஆன் நிரை சூழப்
பூ அலர் தார்க் கோவலனார் நிரை காக்கப் புறம் போந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி