திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

அவர் தம் கண் மனைவியாரும் அருந்ததிக் கற்பின் மிக்கார்;
புவனங்கள் உய்ய ஐயர் பொங்கு நஞ்சு உண்ண யாம் செய்
தவம் நின்று தடுத்தது என்னத் தகைந்து தான் தரித்தது என்று
சிவன் எந்தை கண்டம் தன்னைத் ‘திரு நீல கண்டம்’ என்பார்.

பொருள்

குரலிசை
காணொளி