திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

சால நாள் கழிந்த பின்பு தலைவனார் தாம் முன் வைத்த
கோலம் ஆர் ஓடு தன்னைக் குறி இடத்து அகலப் போக்கிச்
சீலம் ஆர் கொள்கை என்றும் திருந்து வேட்கோவர் தம்பால்
வாலிது ஆம் நிலைமை காட்ட முன்பு போல் மனையில் வந்தார்.

பொருள்

குரலிசை
காணொளி