திருமுறை 12 - பெரிய புராணம் - சேக்கிழார் பெருமான்

77 பதிகங்கள் - 4271 பாடல்கள் - 1 கோயில்கள்

பதிகம்: 
பண்:

தண் அளி வெண் குடை வேந்தன் செயல் கண்டு தரியாது
மண்ணவர் கண் மழை பொழிந்தார்; வானவர் பூமழை சொரிந்தார்
அண்ணல் அவன் கண் எதிரே அணி வீதி மழ விடை மேல்
விண்ணவர்கள் தொழ நின்றான் வீதி விடங்கப் பெருமான்.

பொருள்

குரலிசை
காணொளி